காஞ்சீவரம் மாவட்டம், திருப்போரூர் அருகே அமைந்திருக்கிறது சிறுதாவூர் என்னும் கிராமம். இக்கிராமத்தில்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா இருக்கிறது. இந்த இடத்தின் அருகாமையில் பழைய புத்தர் கோயில் ஒன்று சிதிலமடைந்து கிடக்கிறது. அதை தொல்லியல் துறை கவனிக்கவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தப்படுகின்றனர். எனவே அக்கோயிலை மீட்டு அங்கிருக்கும் புத்தர் சிலையை வைத்து மீட்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே வரலாற்று மீட்பில் ஆர்வம் உள்ள தமஅ-வினர் சிறுதாவூர் புத்தர் கோயிலை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அக்கோயில் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
கௌதம சன்னா
Comments
Post a Comment